திருநெல்வேலி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயம் ..

திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியானதை தொடர்ந்து பட்டாசு ஆலை மூடப்பட்டது இன்று 10க்கும் மேற்பட்டோர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பழைய கழிவு மருந்துகள் கிடந்த இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். காயம் அடைந்த குருசாமி, அர்ஜுன், கோபால் ஆகிய 3 பேர் படுகாயத்துடன் சிவகாசி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெoற்று வருகின்றனர். மேலும் காமராஜ். கனகராஜ் ஆகிய இரண்டு பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!