மதுரை ரயில் நிலையத்தில் உள்ள மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து!!!!

மதுரை ரயில் நிலையத்தில். பிரதான நுழைவாயிலில் உள்ள மின் கம்பியில் இன்று (26/08/2020) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீ எரிவதை பார்த்து உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த, நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமை யிலான தீயணைப்பு துறையினர் மின் இணைப்பை துண்டித்து, மின் கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த தீ அணைத்தனர். கொரொண வைரஸ் தொற்று காரணமாக அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் பயணிகள் யாரும் இல்லை இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, அதிகாலை நேரத்தில் ரயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!