உசிலம்பட்டியில் பள்ளியில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் குழந்தைகள் கிருஷ்ணன்-ராதை வேடமணிந்து வந்தனர்.

தமிழகமெங்கும் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.இதில் பள்ளி மாணவ மாணவிகள் சுமார் 30க்கும் மேற்ப்பட்டோர் கிருஷ்ணன் -ராதை வேடமணிந்து வந்து மேடையில் தோன்றியது பார்வையாளர்கள் மத்தியில் பரவசத்தை ஏற்ப்படுத்தியது.இவ்விழாவில் பங்கேற்று கிருஷ்ணன்-ராதை வேடமணிந்த அனைவருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு பரிசுகள் வழங்கினார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!