காட்பாடி போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜூக்கு பணி நிறைவு பாராட்டு விழா…

வேலூர் அடுத்த காட்பாடி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன்ராஜூக்கு பணி நிறைவு பாராட்டு விழா நேற்று காவல் நிலையத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் பெருமாள் உதவி காவல் ஆய்வாளர்கன்னியப்பன் ஆகியோர் பாராட்டி பேசினர். ஏற்புரையை மோகன்ராஜ் ஏற்றார். காவல் நிலையம் சார்பில் சால்வை, மாலை, தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. சிறப்பு உதவி ஆய்வாளர் ரங்கநாதன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், போலீசார் கலந்து கொண்டனர். பணி ஓய்வு பெற்ற மோகன்ராஜ் சார்பில் வேலூரில் போலீசார், உறவினர், நண்பர்கள் ஆகியோர் தனியார் திருமண மண்டபத்தில் வாழ்த்து கூறினர். காட்பாடி போக்குவரத்து காவல் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியை உதவி ஆய்வாளர் கன்னியப்பன் சிறப்பாக செய்து இருந்தார்.

கே.எம்.வாரியார்

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!