வஃக்ப்-திருடர்களும்..!திருத்தங்களும்..!

வஃக்ப்-திருடர்களும்..! திருத்தங்களும்..!

(ஒரு சிறிய தொடர்)

வஃக்ப் புரிதல் -21

வஃக்ப் சட்ட‌ திருத்த மசோதா, ஆக்ரமிப்பாளர்களை, சொத்துக்களை கையகப்படுத்தி கொள்ளும் சூழலை ஏற்படுத்துகிறது.

இதில் “வரம்பு சட்டம் ” என்பது வஃக்ப் சொத்தை ஆக்ரமித்து வைத்து இருப்பவர்கள் , 12 ஆண்டுகள் அனுபவித்தல் விதிப்படி சொந்தமாக்கிக் கொள்வார்கள்.

இதனால் வஃக்பின் பெருமளவு சொத்துக்கள் குறைந்து விடும்.குறிப்பாக பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்ரமிப்பில் உள்ளன. இவையெல்லாம் இல்லாமல் ஆகிவிடும்.

ஓய்வு பெற்ற புனே வருமானவரி துணை ஆணையரும், சமூக செயல் பாட்டாளருமான, அக்ரமுல் ஜப்பார் கான் அவர்கள், இந்த சட்டதிருத்தம் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர்களுக்கும்,

வஃக்ப் நிலத்தை ஆக்ரமித்து வைத்துள்ள பெரிய தொழில் அதிபர்களுக்கும் மிகுந்த பயனளிக்கும் என்பதே இந்த சட்டத்திருத்தத்தின் பின்னுள்ள நோக்கம் என்று BBC யிடம் கூறினார்.

இது தொடர்பாக பேசிய முன்னாள் வஃக்ப் வாரியத்தலைவர், எம்.அப்துல்ரஹ்மான் அவர்கள் 1995 ஆம்ஆண்டு வஃக்ப் வாரியம் சட்டம் முழுமையானதாக உள்ளது.இப்போது சட்ட திருத்தம் ஏதும் தேவையில்லை என்றார்.

வஃக்ப் நிலங்களில் பிற சமூகத்தினரின் வழிபாட்டு தலங்களும் உள்ளன. இதுவரை எந்த பிரச்சினையும் எழவில்லை என்றார்.

தர்ஹாக்களுக்கும் ஏராளமான வஃக்ப் சொத்துக்கள் இருப்பதால் அதற்கு தனியாக “தர்ஹா வாரியம்” அமைக்க வேண்டும் என்று தான் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண்ரிஜ்ஜு அவர்களிடம் கோரிக்கை வைத்து இருப்பதாகவும்,

அதனை அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்கும் என்று அவர் கூறியதாகவும், அஜ்மீரைச்சேர்ந்த சஜ்ஜாதன்சின் சங்கத்தின் தலைவர் சையத் நஸ்ருதீன் சிஷ்டி கூறினார்.

1995 ஆம்ஆண்டு திருத்த சட்டத்திற்கு முன்பாக வஃக்ப் கண்காணிப் பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் இருந்தது.

இதனைப் பயன்படுத்தி மாவட்ட கண்காணிப் பாளர்களும், முத்தவல்லிகளும், கூட்டு சேர்ந்து அந்நிய நபர்களுக்கு சொத்துக்களை கிரையம் செய்து கொடுத்து மோசடிகள் செய்துள்ளனர்.

1995 ஆம் ஆண்டு திருத்த சட்டம், முத்தவல்லிகள் மற்றும் மாவட்ட கண்காணிப் பாளர்களுக்கு இருந்த தடையில்லா சான்றிதழ் (NOC) வழங்கும் அதிகாரத்தை ரத்து செய்து,

அந்த அதிகாரத்தை மாநில வஃக்ப் முதன்மை செயல் அலுவலருக்கு கொடுத்துள்ளது.

புதிய மசோதாவில் இது ரத்து செய்யப்பட்டு இருப்பதால், சொத்துக்களை மீண்டும் முத்தவல்லிகள் மற்றும் மாவட்ட வஃக்ப் கண்காணிப் பாளர்களுக்கு வந்துவிடும்.

இதனால் எளிதாக சொத்துக்களை கைமாற்றி விட முடியும்.மோசடிகள் எளிதாக நடைபெற வழி ஏற்பட்டுள்ளது .

ஒரு சொத்து வஃக்ப் சொத்து என்று கண்டறியப்பட்டால், அதனை உடனடியாக வஃக்ப் வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று 1995 வஃக்ப் சட்டம் கூறுகிறது.

வஃக்ப் சொத்துக்கள் அனைத்தையும் சூனிய மதிப்பு (Zero value) ஆக்கப்பட்டுள்ளது. இதனால் வஃக்ப் சொத்து சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால், அதற்கு ஏதும் கட்டணம் கட்ட தேவையில்லை.

வஃக்ப் சொத்துக்கள் கையாடலை தடுக்க, அழிவுகளை தடுக்க, இதுபோன்று செய்யப்பட்டது.

இதுபோன்ற நுணுக்கமான முக்கியமான சட்டபூர்வமான தகவல்களை எல்லா முஸ்லிம்களும் அறிந்து கொள்ள வேண்டும்.

வஃக்ப்பின் பல பரிமாணங்களை தொடர்ந்து பேசுவோம்..!

கவிஞர், கப்ளிசேட்!

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!