பாவூர்சத்திரத்தில் கண் தான விழிப்புணர்வு பேரணி..

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியை பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனர், வட்டாரத்தலைவர் இளங்கோ கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க செயலாளர் சசி ஞானசேகரன், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ், ஆனந்த், பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க முன்னாள் பொருளாளர் பரமசிவன், சு. ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு தலைவர் முனைவர் த. அருணாச்சலம் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியினர் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தில் அங்குள்ள நிறுவனர்களை சந்தித்த பின்னர் தமிழ்நாடு முழுவதும் புறப்பட்டு சென்றனர். பேரணிக்கான முழு ஏற்பாடுகளையும் 324 K கண்தான மாவட்ட தலைவர் சோபா ஸ்ரீகாந்த், கண்தான பேரணி மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகிய இருவரும் இணைந்து செய்திருந்தனர். பாவூர்சத்திரம் கண்தான விழிப்புணர்வு குழு துணை தலைவர் முருகன் நன்றி உரையாற்றினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!