மதுரையில் பழைய இரும்பு வியாபாரிகளால் மாசு படும் சுற்றுப்புற சூழல்.. அரசு அதிகாரிகள் கவனிப்பார்களா??..

மதுரை பைபாஸ் சாலை சாலை முத்து நகர் மற்றும் பல பகுதிகளில்  பிளாஸ்டிக் பொருட்களுடன்  கலந்து இருக்கும் இரும்புகளை பிரித்தெடுப்பதற்கும், வயர்களில் உள்ள செம்பு கம்பிகளை பிரித்தெடுப்பதற்கு அதை பொது மக்கள் நடமாடும் சாலைகளில்  தீ வைத்து விடுவதால் சாலை முழுவதும் புகை மூட்டமாக ஏற்பட்டு பொதுமக்கள் மூச்சுத்திணறலுக்கும், பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிறார்கள்.

இது சம்பந்தமாக பலமுறை எச்சரிக்கை செய்தும் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் சில நபர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளும், மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!