குப்பையின் புகையால் அவதிப்படும் மதுரை பைபாஸ் நேரு நகர் மக்கள்…


மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை நேரு நகர் 76வது வார்டு பகுதிகளில் பல இடங்களில் குப்பை அப்பறப்படுத்த படாமல் தொட்டியிலே தீ வைத்து கொளுத்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படுவதுடன் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

இது சம்பந்தமாக நகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பொது மக்களின் நலன் கருதி உடனடியாக அதே இடத்தில் குப்பை  எரிகரகாமல் குப்பையை அகற்றி சுகாதாரக்கேடு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!