திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியின் அவலநிலை….

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வடபுறம் (KTR பூசணிக்காய் கடைக்கு எதிர்புரம் உள்ள ) சாக்கடையில் இரவு நேரங்களில் பிராய்லர் கறிக்கோழி கடைக்காரர்கள் கோழி கழிவுகளை ழூட்டை மூட்டையாக சாக்கடையில் கொட்டி விடுகிறார்கள்.

இதனால் அப்பகுதியை சுற்றி இருக்கக் கூடிய பொதுமக்கள் அனைவருக்கும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது இதனால் அப்பகுதி வட்டாரத்தில் யாரும் குடியிருக்க முடியவில்லை தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது இது சம்பந்தமாக பலமுறை நகராட்சி சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளரிடம் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் எடுத்துக் கூறியும் சுகாதார ஆய்வாளர் கண்டு கொள்வதே இல்லை. இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியாளர்கள் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்…….

கிழை நீயூஸுக்காக முபாரக்அலி, ஒட்டன்சத்திரம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!