மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க அதிகாரிகள் ஆயத்தம் – பொதுமக்கள் எதிர்ப்பு..

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுபடி வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் ரோட்டோர பகுதிக்கு அருகில் புறம் போக்கு பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் இடிப்பதற்கு மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் Revenue dept அதிகாரிகள் வீடுகள் மற்றும் கடைகள் அளவு எடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அப்பகுதி மக்களோ, “தாங்கள் வீட்டு வரி,, குடிநீர் வரி செலுத்தியும்  அதிகாரிகள் இப்படி செய்வது வேதனையாக உள்ளது” என கூறுகின்றனர்.

இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைகளை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை :பெரியதுரை

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!