தன்னலம் பேணாமல் பிறர் நலம் நாடி விருந்து படைக்கும் கீழக்கரை இளைஞர்கள்..

கீழக்கரையில் பல அமைப்புகளும், சங்கங்களும் பல ஊர்களுக்கு இஃப்தார் விருந்து படைத்து வரும் வேலையில், எந்த ஒரு அமைப்பையும் சாராமல் தங்கள் பெயரை கூட வெளியிட விரும்பாத கீழக்கரை இளைஞர்கள் சிலர் கடந்த 6 வருடமாக இராமநாதபுரம் மாவட்டம் எக்குடி கிராம மக்களுக்கு இஃப்தார் விருந்து கொடுக்கிறார்கள்.

இந்த வருடமும் கீழக்கரை இளைஞர்கள் எக்குடி கிராமத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மக்களுக்கு இப்தார் விருந்து வைத்தனர்.  தான் செய்யும் சேவை மக்களுக்கு அடைந்தால் போதும் பெயரும் புகழும் தேவையில்லை என்று தன்னலம் இல்லாமல் பணிபுரியும் இந்த பெயர் வெளியிட விரும்பாத இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்களே…

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!