பெருநாளுக்கு தயாராகும் கீழக்கரை…

ரமலான் மாதம் 30 நாட்களும் பிரார்த்தனையிலும், இறைவனை துதிப்பதிலும் அதிகம் அதிகம் மக்கள் நேரத்தை செலவிடுவார்கள். கடைசி பத்து நாட்களில் இரவு நேரத் தொழுகையுடன் பெருநாள் கொண்டாட்டத்திற்கும் தயாராக தொடங்கிவிடுவார்கள்.

பெருநாளுக்கு சிறுவர்கள் விரும்பும் வெடி, மத்தாப்பு கடைகள், பெருநாள் சிறப்பு கைலி, வேஷ்டி கடைகள், இளைஞர்கள் இரவு நேரத்தில் மகிழ்ச்சியுர டீக்கடைகள், இனிப்பு வகை வியாபாரம் என்று கீழக்கரை கடைத்தெரு களை கட்ட தொடங்கிவிட்டது. பெருநாள் கொண்டாட்டத்திற்காக வெளியூர் மற்றும் வெளிநாட்டில் இருந்து மக்களும் ஊருக்கு வரத் தொடங்கி விட்டார்கள்.

இப்பொழுதே பெருநாள் களை தொடங்கிவிட்டது. தலைமுறை தலைமுறையாக தொழில் செய்து வரும் செட்டியார் அண்ணண்மார்கள் மத்தாப்பு கடையை தொடங்கிவிட்டார்கள், இதுபற்றி அவர்கள் கூறும் பொழுது இந்த பெருநாள் மத்தாப்பு வியாபாரம் லாபத்திற்காக மட்டும் செய்வதில்லை, ஆனால் சிறுவர்கள் கையில் கிடைக்கும் பெருநாள் காசை வைத்து நாங்கள் கொடுக்கும் பட்டாசை சிரித்த முகத்துடன் வாங்கி செல்வது எங்களுக்கு மன திருப்தி என்றார். அனைவருக்கும் முதல் பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]

One thought on “பெருநாளுக்கு தயாராகும் கீழக்கரை…

  1. காசைக் கரியாக்காதே! பட்டாசு வாங்கி விடு என்று நாங்கல்லாம் சிறார்களாக இருக்கும்போது அப்போதைய பெருசு ஒன்று (பெயர் ஞாபகமில்லை) சொல்லக் கேட்டிருக்கேன்…

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!