தூசியில் மூழ்கிய ரியாத் நகரம்..

சவுதி அரேபியாவில் ஒவ்வொரு பருவ மாற்றத்தின் போது காற்று வீசி பருவம் மாறும். ஆனால் இந்த வருடம் கடந்த ஒரு மாதமாகவே காற்றுடன், அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது.
இன்று (23/04/2018) மாலை வரை தெளிவாக இருந்த ரியாத் மாநகரம் திடீரென தூசி மூட்டம் காணப்பட்டது.  இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்துக்கு ஆகியுள்ளார்கள்.
இது சம்பந்தமாக சவுதி அரேபியா வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த மாற்றம் எப்போதும் வரக்கூடிய கோடை கால வானிலையின் மாற்றமாகும்.  பாலைவனத்தில் ஏற்பட்டுள்ள புயலால் இந்த புழுதி காற்று ஏற்பட்டுள்ளது, இன்னும் சில நாட்களில் வெப்பநிலை மாறும்” என்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!