துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி.!

 

துபாய் விமானம் தொடர்ச்சியாக நேர தாமதம் பயணிகள் அதிருப்தி



மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் வழமையாக காலை 12:10 மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது. ஆனால், சமீபத்திய மாற்றங்களின் அடிப்படையில் இந்த விமானத்தின் புறப்பாட்டு நேரம் முதலில் மாலை 5:10 ஆக மாற்றப்பட்டது. அதன் பின்னர், மீண்டும் மாலை 6:10 ஆக மாற்றப்பட்டதற்கும் தொடர்ச்சியான நேர மாற்றங்களுக்கும் விமான பயணிகள் கடும் வேதனையை எதிர்கொண்டு வருகின்றனர்.

 

தொடர்ச்சியாக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் நேர மாற்றங்களை மேற்கொள்வது, பயணிகள் திட்டமிடல்களில் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. பலர் தங்களின் கனெக்டிங் விமானங்கள், பஸ்கள் மற்றும் பணியிட கூட்டங்கள் போன்ற முக்கியமான நடவடிக்கைகளை இழந்துள்ளனர்.

 

விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டின் இந்த விதமான செயல்முறையை பயணிகள் கண்டித்து வருகின்றனர். விமான நேரங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்த முறையான முன்னறிவிப்பும், பராமரிப்பும் இல்லாமல், பயணிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டியதுடன், பயணிகள் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

 

Very Soon…

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!