கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம் மற்றும் செஞ்சிலுவை சங்கம் சார்பாக 03.07.2017 அன்று காலை 10.30 மணியளவில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இப்பேரணிக்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு P. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இப்பேரணியினை கீழக்கரை துணை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணி கீழக்கரை ஆய்வாளர் திலகவதி மற்றும் சார்பு ஆய்வாளர் வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பேரணி கீழக்கரை காவல் நிலையத்தில் துவங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் கடற்கரையில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு போதைப்பொருட்களால் ஏற்படும் தீங்கு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையேந்திச் சென்று கோஷமிட்டவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் செஞ்சுருள் சங்க அலுவலர் ஆனந்த் உடற்கல்வி இயக்குநர்மு. தவசிலிங்கம், கீழக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் பாண்டிச்செல்வி, கிருஷ்ணமூர்த்தி, பொந்துமுனியாண்டி, பச்சமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் N. சுலைமான், ஏ. ராஜமாணிக்கம், எஸ்தர் கண்மணி மற்றும் கீழக்கரை காவல்நிலைய தலைமைக் காவலர்கள் கலைமன்னன், மேரி போர்சியை பகவதி, இராமர்ராஜ் மற்றும் கமலஹாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் அல்ஹாஜ் யூசுஃப், செயலர் ஷர்மிளா மற்றும் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









