கீழக்கரையில் மீண்டும் திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டம் சார்பில் நிவாரணம்..

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் சென்ற ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தில் ஒன்றிணைவோம் வா என்கின்ற திட்டத்தை அறிவித்து ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் மாறு திமுகவினருக்கு அறிவிப்பு செய்தார் வழங்கினார். அதைப்போல் இவ்வாண்டும் கொரோனா பேரிடர் காலமென்பதால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மீண்டும் ஒன்றிணைவோம் வா என்கின்ற திட்டத்தை அறிவித்து அதனடிப்படையில் திமுகவினர் வறுமையில் வாடும் ஏழை எளியவர்களுக்கு இலவச உணவு பொருள்களை வழங்குமாறு உத்தரவிட்டார். அதை ஏற்ற திமுகவினர் தினம்தோறும் ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அதேபோல் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒன்றிணைவோம் வா என்கின்ற திட்டத்தின் மூலம் திமுக நகர் செயலாளர் பசீர் அகமது தலைமையில் ,நகர் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீதுசுல்தான் முன்னிலையில் கிழக்குதெரு, சின்னக்கடைத்தெரு,வடக்குத்தெரு, புதுத்தெரு, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 200க்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினர்.மேலும் இதில் நகர் துணைச்செயலாளர்கள் ஜமால்பாரூக், கென்னடி,மாவட்ட பிரதிநிதிகள் மரைக்கா, ஜபருல்லா நகர் பொருளாளர் சித்திக்,நகர் மாணவரணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன்,  தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் முகம்மது ஹாஜா சுஐபு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஷாகுல் ஹமீத், மக்கள் டீம் காதர், மீரான், பயாஸ்,நைம், எபன் பிரவீன் குமார்,மீரான், சன்சைன் அன்சாரி, அமீர், தவ்பிக், சித்திக், ரஹ்மத்துல்லா, அஸ்கர் அலி, உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!