கீழக்கரையில் ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம் – தி.மு.க நிர்வாகிகள் 20 க்கும் மேற்பட்டோர் கைது

கீழக்கரை நகரில் இன்று 13.03.17 காலை 11.30 மணியளவில் கீழக்கரை நகர் தி.மு.க சார்பாக ரேசன் கடைகள் முன்பாக பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வழங்கிட கோரி ரேஷன் கடை முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிழக்கு தெரு அப்பா பள்ளிவாசல் பின்புறம் உள்ள ரேசன் கடையின் முன்பாக நடைபெற்ற முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் செயலாளர் S. A.H.பசீர் அகமது தலைமையில் நகர் கழக நிர்வாகிகள் கென்னடி, மூர் ஜெய்னுதீன், ஜமால் பாருக், முன்னாள் வார்டு கவுன்சிலர் சாகுல் ஹமீது, கெஜி என்கிற கஜேந்திரன், மணிகண்டன், கழக முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கீழக்கரை சார்பு ஆய்வாளர் வசந்த குமார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!