தி.மு.க தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு எத்தீம்கானாவுக்கு அரசி வழங்கப்பட்டது…

தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளில் கருத்தரங்கம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக கீழக்கரை முள்ளுவாடியில் உள்ள அருளகம் எத்தீம்கானாவிற்கு நோன்பு காலத்தில் பயன்பெறும் விதமாக அரிசி மூட்டைகள் தி.மு.க சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி தி.மு.க நகரச் செயலாளர் பஷீர் அகமது தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏராளமான இஸ்லாமிய சமுதாய மக்கள், எத்தீம்கானா மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!