






தமிழ்நாட்டின் துணை முதல்வரின் 48ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர திமுக சார்பில் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வின் தொடக்கமாக நகர செயலாளர் திரு. S.A.H. பஷீர் அஹமது தலைமையில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.
அத்துடன், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டதோடு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கீழக்கரை நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட மற்றும் நகர திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
You must be logged in to post a comment.