தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு !

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (13.01.2024) காலை நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார், காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!