அமைதி காக்க மறுத்த அடியனூத்து பஞ்சாயத்து கிராம மக்கள் , கிராம சாபாவை‌ நடத்த தினறிய செயலாளர்

திண்டுக்கல் மாவட்டம் கண்ணாபட்டி கிராமத்தில் இன்று கிராமசபா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ஊராட்சி செயலாளர் நாகராஜ் தலைமை பொறுப்பேற்றார் அவருடன் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஊா் “பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளா் நாகராஜ் ஊராட்சியின் வரவு செலவினை வாசித்தார் வாசிக்கும் போது அவருக்கும் பொதுமக்களுக்கும் வாய்த்தகராறு ஏற்ப்பட்டது மேலும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தெரியாமல் திகைத்து நின்ற செயல்அலுவலர் நாகராஜ் தான் செயல்படுத்த தவறிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் “அரசு வழங்கும் மானியம் மற்றும் திட்டங்களை விரிவாக எடுத்துரைத்தார் இதை அடுத்து மக்கள் அமைதிகாத்து தங்கள் கருத்துக்களைக் கூறினர்கள் அவற்றிற்கு அவர் விளக்கம் அளித்து நிதிநிலை பொருத்து, வீடு இல்லாத மக்களுக்கு பசுமை திட்டத்தில் வீடு கட்டி தருவதாகும் மற்றும் கழிப்பறை இல்லாதவர்களுக்கு கழிப்பறை வசதியும் வற்றிப்போன போர்களுக்கு நிலத்தடி நீர் பெருக்குவதற்கான வசதியையும் அதற்குண்டான மானியத்தையும் பெற்று தருவதாக எடுத்துக் கூறினார் மேலும் மழை நீரை சேகரிக்க உதவிகள் செய்வதாகவும் அவர் தெரிவித்தார் இதைக்கேட்ட பொதுமக்கள் அடுத்த கிராம சபா பொதுக்கூட்டம் நடைபெறுவதற்குள் அவர் கூறிய அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து தருமாறு செயல்அலுவலரை எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்

செய்தியாளர் திண்டுக்கல் மாவட்டம் அழகர்சாமி

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!