திண்டுக்கல் அருகே முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கலையரங்கம் திறந்து வைத்தார்..
நத்தம் அருகே ஆவிச்சிபட்டி ஊராட்சி நடுவனூரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது. இதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினார். இதில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன்,ஒன்றிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கண்ணன், ஆண்டிச்சாமி, ஜெயப்பிரகாஷ், நகர அவைத் தலைவர் சேக்ஒலி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.