செம்பட்டி அடுத்துள்ள கேத்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த வாலிபருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி!
பச்சமலையான் கோட்டை ஊராட்சி கேத்தையகவுண்டன் பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் இருந்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கேத்தையகவுண்டன் பட்டிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இத்தகவலை அந்த ஊரை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் மருத்துவதுறை சார்பாக அவரை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொரொனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதின் பேரில் அவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அப்பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்து வழிகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டு செம்பட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.


You must be logged in to post a comment.