ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு பாட்டிலால் குத்து மருத்துவமனையில் அனுமதி!

ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு பாட்டிலால் குத்து மருத்துவமனையில் அனுமதி!

சித்தைகோட்டை பேரூராட்சி பகுதியில் வசித்து வருபவர் நாகூர்கனி இவர் வைத்திருந்த இருசக்கர வாகனம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக சொல்லப்படுகிறது. அப்போது இவரது நண்பர் சாதீக் ரகுமான் என்பது கானாமல் போன வாகனம் பாளையங்கோட்டையில் இருப்பதாக கூறுகிறார். அதன்பின் நாகூர்கனி,சாதீக் ரகுமான், பிரபாகரன் மூவரும் சேர்ந்து பாளையங்கோட்டை சென்று விசாரித்துள்ளனர். அப்போது அங்கு இவர்களுடைய இன்னொரு நண்பரான முத்து ராஜ் என்பவரும் அங்கு இருந்துள்ளார். சாதீக் ரகுமானுக்கும், முத்து ராஜ் என்பவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த முத்து ராஜ் அவர் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து சாதீக் ரகுமானின் தலை,முகம் மற்றும் கழுத்து பகுதியில் குத்தியதாக கூறப்படுகிறது.இதில் படுகாயமடைந்த சாதீக் ரகுமான் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல்துறையினர் முத்துராஜ் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!