பாலக்கோடு அருகே பிக்கிலி காப்புக்காடு மற்றும் திருமல்வாடி காப்புக்காடு பகுதியில் மான் மற்றும் முயல் வேட்டையாடிய இருவர் கைது 35 ஆயிரம் ரூபாய் அபராதம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரக அலுவலர் செல்வம் மற்றும் வனவர் அருணா கல்யாணசுந்தரம் மற்றும் வன காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது பிக்கிலி பகுதியை சேர்ந்த சஞ்சீவன் மகன் சிவராஜ் 46 என்பவர் முயல் வேட்டை யாட சென்றபோது வனத்துறையினர்  அவனை கைது செய்து 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் திருமல்வாடி காட்டுப்பகுதியில் சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சேர்ந்த திம்மையன் மகன் சரவணன் 34 என்பவர் மானை வேட்டையாடி வீட்டில் மான் தோலை வைத்திருந்ததால் அவரை கைது செய்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது மான் தோல் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!