மயிலாப்பூரில் சார்பு ஆய்வாளர் கொரொனா நோய்தொற்று பரவாமல் தடுப்பது பற்றி விழிப்புனர்வு பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் மயிலாப்பூரில்  திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  வேல்முருகன் அப்பகுதி மக்கள் மத்தியில் கொரோனா நோய்தொற்று பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.இதில் கொரொனா நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும்  நோய்தொற்று வராமல் தடுப்பதற்குவிழிப்புணர்வுடன் செயல்படுவது பற்றியும்கொரோனா விழிப்புணர்வுக்காக தமிழக அரசு சார்பாக எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் அரசு உத்தரவுன்படிதிண்டுக்கல் மாவட்ட காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கை பற்றியும் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து மக்களுக்கும் புரியும் விதமாக எடுத்துரைத்து கூறினார்.மே

லும், அனைத்து மக்களும் அரசு மற்றும் காவல்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தந்து உதவ வேண்டுடியும் கூறினார்.இன்னிகழ்ச்சியில்மயிலாப்பூர், அருளானந்தர் நகர், பகுதியை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்துகொண்ட பொதுமக்கள் சார்பு ஆய்வாளரின் விழிப்புனர்வை ஏற்று செயல்படுவதாக உறுதியளித்தனர்.கூட்டமுடிவில் சார்பு ஆய்வாளர் வேல்முருகன் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!