பாலகிருஷ்ணாபுரம்ஊராட்சி அனுமந்த நகரில் கிராமசபை கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணா புரம் ஊராட்சி அனுமந்த நகரில் 02/10/19 இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் குடி நீர் சேமிப்பு பற்றியும் மழைநீர் சேமிப்பு பற்றியும் மழைநீரை சேமித்து வருங்கால சந்ததியை காப்போம் என்றும் கொசுவினால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் போன்ற வற்றில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது தொடர்பான விவரங்கள் பற்றி கிராம நிர்வாக அலுவலர் ஜான் போஸ்கோ, சுகாதார அதிகாரி வெற்றி வேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி மற்றும் மெம்பர் பாண்டி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார் கள்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!