அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்

ஆத்தூர் அரசு மருத்துமனையை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆத்தூர் ஒன்றிய செயலாளர் அரசு தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.இதில் ஆத்தூர் அரசு மருத்துமனையில் இரவு நேரபனியில் மருத்துவர்கள் இருப்பதில்லை.ஆகையால் இரவு நேரங்களில் வரும் அவசர நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்காமல் பனியில் இருக்கும் செவிலியர்கள்திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைப்பதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.பனியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் ஆத்தூர் பகுதிவாழ் மக்களுக்கு கொரொனா விழிப்புனர்வு பிரச்சாரம் எதுவும் செய்யப்படவில்லை என கோரிக்கையை முன்வைத்துஆத்தூர் அரசு மருத்துமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு பாதுகாப்பு பனியில் ஈடுபட்டிருந்த செம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் நாராயனன் மற்றும் காவலர்கள்பனியில் இருந்த மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம்சுகாதாரதுறை மாவட்ட தலைமை அதிகாரிகளிடம் பேசி15 நாட்களில் இரவு பனிக்கு மருத்துவர் நியமித்து கொரொனா விழிப்புனர்வு பிச்சாரம் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததின் பேரில்முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!