கீழக்கரை பெண் டாக்டருக்கு கொலை மிரட்டல் இருவர் கைது..

இராமநாதபுரம் மாவட்டம் அண்ணா நகரைச் சேர்ந்த பாலு மகன் வேலவன், 24. வயிற்று வலியால் அவதியடைந்த இவர் ஜூலை 22ல் கீழக்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பார்க்க அண்ணா நகர் முருகேசன் மகன் சந்தானக் குமார் 20 நேற்று காலை அங்கு சென்றார். அப்போது டாக்டர் பிரியதர்ஷினி உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வந்த அவரை வேலவன், சந்தானக்குமார் ஆகியோர் கேலி செய்தனர்.

இது தொடர்பான வாக்குவாதத்தில் டாக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பிரியதர்ஷினி புகாரின் பேரில் வேலவன், சந்தானக்குமாரை காவல் உதவி ஆய்வாளர் முனீஸ்வரன் கைது செய்தார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!