திண்டுக்கல் மலைக்கோட்டை குளத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் மூழ்கி பலி..

திண்டுக்கல்  மலைக் கோட்டையின் அடிவாரத்தில் உள்ள குளத்தில் திண்டுக்கல்  சௌராஷ்ட்ரா பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும்   சக்தி, பிரபு என்ற இரண்டு மாணவர்கள் குளிப்பதற்காக கோட்டை குளம் வந்துள்ளனர். குளத்தில் குளிக்கும் போது   ஆழம் அதிகமாக உள்ள பகுதிக்கு  சென்றுவிட்டதால் கரையேற முடியாமல் தத்தளித்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. அருகில் விளையாடிக் கொண்டிருந்த மற்ற  மாணவர்கள் தகவல் கொடுத்ததின் பேரில் நகர் தெற்கு காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி:- திண்டுக்கல் பக்ருதீன்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!