திருமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி…

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் முத்துப்பாண்டி வயது 21 தோட்டத்தில் குளித்துவிட்டு மின்சார எர்த் வயரின் மேல் கிடந்த டவலை எடுக்க முற்பட்டபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!