கீழக்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய அபூர்வ ஆமை

கீழக்கரை கண்ணாடி வாப்பா சிறுவர் விளையாட்டு பூங்கா கடற்கரை அருகே இன்று இறந்த நிலையில் அபூர்வ ஆமை ஒன்று கரை ஒதுக்கியுள்ளது. மன்னார் வளைகுடா கடற் கோள பகுதிகளில் ஏராளமான ஆமை வகைகள் வாழ்கின்றன.

சுமார் 30 கிலோ எடையுள்ள இந்த இந்த அபூர்வ வகை ஆமை பாறைகளில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் அறிந்த பொதுமக்கள் கரை ஒதுங்கியுள்ள இறந்த ஆமையை பார்த்து சென்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட  துறை அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டுள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!