பரமக்குடி வைகை ஆற்றில் எரிந்தநிலையில் ஆண் சடலம் மீட்பு..

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் தரைப்பாலம் அருகில் இன்று காலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் விசாரணை செய்ததில்

இறந்தவர் எமனேஸ்வரம் வடக்கு ரத வீதியை சேர்ந்த பாலு மகன் நாகநாதன் என்றும் இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், கணேஷமூர்த்தி, நாகராஜன் என்ற இரு மகன்களும் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து எமனேஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். மேலும் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!