பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதிவண்டி…

இராமநாதபுரம், மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலம், கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வி.ஆண்டில் 105 பள்ளிகளை சேர்ந்த 9,936 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ஒதுக்கீடு பெற்று இதுவரை 5,091 பேருக்கு மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது. முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் 120 மாணவிகள், 127 மாணவர்க என 247 மாணவ, மாணவிகளுக்கு ரூ.7,20,325/- மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுள்ளது. மற்ற மாணவ, மாணவிகளுக்கும் இம்மாத இறுதிக்குள் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், முதுகுளத்தூர் ஊராட்சி தலைவர் ஷாஜகான், பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சாகுல் அமீது, தலைமை ஆசிரியர் அலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!