கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் சாமண்ணா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது இங்கிருந்து மேட்டுப்பாளையம் பொது மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் வழியாக மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் பூஸ்டர் தொட்டி மூலம்
8 வார்டுற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது இரண்டு நாட்களுக்கு முன்பதாக குடிநீர் விநியோகம் செய்யும் குழாய் யுபிஎல் அருகில் பழுதுபட்டது பழுது நீக்கும் பணியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்கள் இரண்டு நாட்களாக ஈடுபட்டுள்ளனர்
பருவமழை மற்றும் தண்ணீர் கசிவினால் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது பணியினை பார்வையிட்ட மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா மற்றும் தலைமை பொறியாளர் ஆகியோர் பணியை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கினார்கள் மேலும் இப்பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அடைப்புகளையும் சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்

You must be logged in to post a comment.