இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி மற்றும் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உத்தரவின் பேரில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக் தீன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கீழக்கரை தெற்குத் தெரு பகுதிகளில் இன்று (22/05/2021) கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம் நடத்தினர். இதில் ஏராளமானோர் வந்து தடுப்பூசி மற்றும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
இதில் நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி, பொறியாளர் மீரான், கீழக்கரை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் தெற்கு தெரு ஜமாத் தலைவர்கள், செயலாளர், கீழக்கரை திமுக நகர கழக செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.








You must be logged in to post a comment.