ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலருக்கு கொரோனோ தொற்று.. காவல் நிலையம் மூடல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி காவல் நிலையத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதியானதைடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.இதனைத் தொடர்ந்து அங்கு பணிபுரிந்து வந்த 50 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச்சாவடியில் பணிபுரிந்த காவலருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டதால் நேற்று இரவு நத்தம்பட்டி காவல் நிலையம் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50 க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.மேலும் நத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் பரிசோதனை ரிப்போர்ட் வரும் வரை தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!