காஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த அம்மணம் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.

இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், கைபேசி எண் சேர்த்தல், முகவரி மாற்றம், ஆகிய சேவைகள் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு வட்ட வழங்கல் ஆய்வாளர் முருகேசன், உதவியாளர் மூர்த்தி, அம்மணபாக்கம் நியாய விலைக் கடையின் பணியாளர் கன்னியம்மாள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!