அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் ..

இராமநாதபுரம் அரண்மனை முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் தலித் இன மக்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய மோடி அரசை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

இந்த உண்ணாவிரதம் மாவட்ட தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்றன முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் முன்னிலை வகித்தார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் செல்லத்துரை, மாநில பேச்சாளர் ஜெய்னூல் ஆலம் கருணா கரண், மாவட்ட துணை செயலாளர் துல்கிப், நகர் தலைவர் கோபி, செய்தி தொடர்பாளர் கெளசி மகாலிங்கம், சரவண காந்தி, சகுந்தலா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!