வீட்டில் பதுக்கிய வலி நிவாரணி மாத்திரை, பூச்சி கொல்லி மருந்து பறிமுதல்..

இராமநாதபுரம், அக்.9- இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடல் வழியாக இலங்கைக்கு இரவில் கடத்திச் செல்வதற்காக பெருங்குளம் பகுதியில் ஒரு வீட்டில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மண்டபம் மெரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, பெருங்குளம் தீன்யா தெருவில் உள்ள ஒரு வீட்டை மண்டபம் மெரைன் போலீசார்,  உச்சிப்புளி போலீசாரின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். அங்கு 23 பெட்டிகளில் இருந்த வலி நிவாரணி 60 ஆயிரம் மாத்திரை (PRAGAB) 2 பெட்டிகளில் இருந்த 200 பாட்டில் பூச்சி கொல்லி மருந்து (TAFGOR) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மண்டபம் அருகே வேதாளை பகுதியைச் சேர்ந்த நூருல் பைசின் என்பவரை கைது செய்து விசாரணைக்கு பின் விடுவித்தனர். தலைமறைவான மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!