செய்தி எடுக்க சென்ற பத்திரிகையாளர் மீது வழக்கு பதிவு..!??

இராமநாதபுரம் மாவட்டம் சட்டம் ஒழுங்கு புலனாய்வு பத்திரிக்கை நிருபர் கார்த்திகேயன் கடலாடி ஊராட்சி ஒன்றிய தொடக்ப்பள்ளி சாயல்குடி ( காவல் நிலையம் எதிரே உள்ள ) யில் பணியாற்றும் தலைமையாசிரியைக்கும் உடன் பணியாற்றிய ஆசிரியர் ஒருவருக்கும் தகாத உறவு இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு செய்தி எடுக்க சென்றுள்ளார்.

ஆனால் செய்தி சேகரிக்க சென்ற  நிருபர் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். புகார் கொடுத்தவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி இவரின் நல்லொழுக்கம் பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்வர வேண்டும் என தமிழ்நாடு பத்திரிக்கை நிருபர்களும், தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர்ஸ் தலைவர் சிவதமிழவன் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!