துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது காவல் நிலையத்தில் புகார்…

திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாரளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுகிறார். கடந்த வாரம் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையுனர் சோதனை செய்து ரூ 19 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த போது தனது கையிருப்பு ரூ 9 லட்சம் என்று கதிர் ஆனந்த் குறிப்பிட்டு இருந்தார். அதிகாரிகள் 9 லட்ச ருபாயை திருப்பி கொடுத்து விட்டு மீதி ரூ 10 லட்சத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.  காவல் நிலையத்தில் தேர்தல் செலவின உதவி அலுவலர் கதிர் ஆனந்த் மீது புகார் கொடுத்து உள்ளார்.

சென்ற வாரம் துரைமுருகன் உதவியாளர் அஸ்ரப் அலி, மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன், விஜயா வீடுகரில் ரூ 50 கோடிக்கு அதிகமான பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!