கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய 22 -வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் இராமநாதபுரம் இன்ஃபேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் பள்ளியில் 11-08-2024-ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. அதில் 350-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
இவ்விழாவில்இன்ஃபேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜான், சதுரங்க கழக மாவட்ட தலைவர் Dr.சுந்தரம்,ரோட்டரி மாவட்டம் 3212 -ன் மாவட்ட ஆளுநர் தேர்வு Er.தினேஷ் பாபு, zone – I ன் துணை ஆளுநர் Dr. ரம்யா தினேஷ், கீழக்கரை ரோட்டரி சங்க தலைவர் Adv. கேசவன், செயலாளர் Ark. சிவகார்த்துக் , பொருளாளர் Dr. ராசிக்தீன், எபென் மற்றும் பலர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுக்கோப்பைகள், கேடயங்கள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தனர்.
இந்த சிறப்பான விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் சதுரங்க கழக மாவட்ட செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் மிகவும் நேர்ர்த்தியான முறையில் செய்து இருந்தனர்.
You must be logged in to post a comment.