ஆவடி பகுதிகளில் நூதன முறையில் மிரட்டி பணம் பறித்த கும்பல்! கொத்தாக பிடித்து கைது செய்த போலீசார்..

ஆன்லைன் டேட்டிங் செயலில் நூதன முறையில் பணம் பறித்து வந்த ஆவடி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த லியோதுரை (25), சீனிவாசன் (26), தமிழன் (25), முகமது ரியாஸ் (23), பிரித்திவிராஜ் (28) ஆகிய 5 பேர் கைது.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் (24) என்பவருக்கு, அகிலா என்ற பெண் டேட்டிங் செயலில் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவசர தேவையாகக் கண்ணனிடம்₹500 பெற்ற அகிலா தொடர்பில்லாமல் சென்றுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி அகிலா தற்கொலை செய்துவிட்டதாகவும், அது தொடர்பாகக் கண்ணன் மீது வழக்கு தொடர உள்ளதாகக் கூறி ₹13,500 பெற்ற நிலையில், மேலும் ₹70,000 கேட்டு அந்த கும்பல் மிரட்டியுள்ளது. அந்த தொகையைத் தர மறுத்த கண்ணன் போலீஸில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!