30 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது வழக்கு ..

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 43. இதே பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சுற்றுலா பேரூந்து வாங்கி டிராவல்ஸ் ஆரம்பிக்க முடிவு செய்தார். பஸ் வாங்குவதற்காக செந்தில்குமாரிடம், சீனிவாசன் பணம் கேட்டார். இதன்படி சீனிவாசனுக்கு கனரா வங்கி கணக்கு மூலம் செந்தில்குமார் ரூ.3 லட்சம் செலுத்தினார்.

பல தவணைகளில் ரூ.17 லட்சத்தை செந்தில்குமாரிடம் இருந்து சீனிவாசன் பெற்றுக்கொண்டார். ரூ.30 லட்சத்திற்கு மேல் வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாக செந்தில்குமார் போலீசில் புகார் கொடுத்தார். இதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சீனிவாசன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!