ஜுன்-26 சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்….

போதையை தவிர்!!கல்வியால் நிமிர்.. என்ற முழக்கத்தை முன்வைத்து கேம்பஸ் ஃபரண்ட் ஆஃப் இந்தியா கீழக்கரை நகர் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது. கீழக்கரை கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கீழக்கரை பகுதித் செயலாளர் அப்ரித் தலைமையில் நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கீழக்கரை பகுதி மாணவர்கள் போதை ஒழிப்பு பற்றிய பதாகைகள் ஏந்தி பிரச்சாரம் மேற்கொண்டனர். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கீழக்கரை பகுதி உறுப்பினர் நிஹால் போதை ஒழிப்பு பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் சகோதரர்கள் கலந்துக்கொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!