கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கீழக்கரையில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது..

கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கீழக்கரையில் இன்று (23/04/2020) காலை 8:00 மணியளவு முதல் சாலை தெரு, கருபட்டிகார தெரு, ஈசா தண்டல் தெரு, நடு தெரு , ஆடருத்தான் தெரு – பருத்திகார தெரு, ஆகிய பகுதிகளில் கபசுர குடிநீர் வீடுவீடாக வழங்கப்பபட்டது.

இதில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் கீழை நகர் தலைவர் காதர் முகைதீன் தலைமை ஏற்றார். நகர் செயலாளர் அஃப்ரித் நிகழ்ச்சியை துவங்கிவைதார்.

மேலும் இந்நிகழ்வில் செயல்வீரர்கள் வீரர்கள் முஜிப், அல் அமான், இப்ராஹிம்ஷா, சுகைல், அழிபுள்ளா, இத்ரீஸ் ஆகியோர நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் சகோதரர்கள் சல்மான், ஜூல்ஃபி, சீனி, அஸ்ஃபாக், ஷகீல், ஹாஜா அலாவுதீன், ஹாஜா ஆகியோர்கள் உடன் இருந்து ஏற்பாட்டு உதவிகள் செய்தனர்.

இந்திகழ்வில் SDPI கட்சியின் நிர்வாகி நூருல் ஜமான்  மற்றும் முன்னாள் நிர்வாகிகள் சித்திக், அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!