தேசிய இளைஞர் தினம்: விவேகானந்தர் ஸ்தூபிக்கு சிறப்பு பூஜை !

அமெரிக்கா சிகாகோ மாகாணத்தில் நடந்த ஆன்மிக மாநாட்டில் உரையாற்றிய சுவாமி விவேகானந்தர் 1897 ஜன.25 ஆம் தேதி ராமநாதபுரம் வருகை புரிந்ததாகவும் . அவர் உரையாற்றிய கேணிக்கரை பகுதியில் விவேகானந்தர் ஸ்தூபி விளக்கு தூண் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு விவேகானந்தர் நண்பர்கள் குழு சார்பில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விவேகானந்தர் பிறந்த தினம், இளைஞர் தினத்தை முன்னிட்டு விவேகானந்தர் ஸ்தூபிக்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜை செய்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விவேகானந்தர் நண்பர் குழு சார்பில் டாக்டர் மனோஜ் குமார் கல்வி உபகரணங்கள் வழங்கினார். இந்த விவேகானந்தர் ஸ்தூபிக்கு நகரின் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!