மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்கா??.. கீழக்கரையும் கடும் தண்ணீர் பஞ்சத்தை நோக்கி செல்லும் அபாயம்..

சமீபத்தில் மூன்றாம் உலகப்போர் நடந்தால் அதற்கு முக்கிய காரணம் தண்ணீராகத்தான் இருக்கும் என்பதை பார்க்க நேர்ந்தது, சிந்திக்கவும் வைத்தது. ஏனென்றால் சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் உள்ள கேப் டவுன் எனும் நகரம் “DAY ZERO” எனும் நீரில்லா நிலையை அறிவித்துள்ளது. “DAY ZERO” என்பது அரசாங்கம் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ள தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு ரேசன் முறையில் வழங்கப்படும். இந்த பட்டியலில் இந்தியாவில் உள்ள பெங்களூரும் உள்ளது, அதைத் தொடர்ந்து பெய்ஜிங், டோக்யோ, மாஸ்கோ, மியாமி, […]

கீழக்கரை நகராட்சி வார்டு மறுவரையறையில் குளறுபடி – நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருடன் சட்டப் போராளிகள் சந்திப்பு

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டதில் குளறுபடி உள்ளதாக வழங்கப்பட்ட மனுக்களின் அடிப்படையில், நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் மாவட்ட வாரியாக நேற்று (10.02.18) முதல் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்று இராமநாதபுரம் வருகை தந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், நிர்வாக குளறுபடிகளை மொத்த குத்தகைக்கு எடுத்திருக்கும் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து கீழக்கரை சட்டப் போராளிகளுக்கு இராமநாதபுரம் வந்திருக்கும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரை சந்திக்க வருமாறு கீழக்கரை […]

முன்னாள் MLA வீட்டின் எதிரே சாயும் நிலையில் அபாய மின் கம்பம் – கயிறு கட்டி பொதுமக்களை காக்கும் அவலம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவில் கடலாடி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  MLA ஹாமீது இபுறாகீம் வீட்டின் எதிர் புறம் 19/14 என்கிற நகராட்சி குறியிட்ட மின் கம்பம் ஒன்று பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நிற்கிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட இந்த பழமையான இரும்பினாலான மின் கம்பம் மிகவும் துருப்பிடித்த நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த 43 ஆண்டு கால மின் கம்பம் என்று சாய்ந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்தி விடுமோ..?  […]

கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு

கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்த 2011 ஆம் ஆண்டின் கீழக்கரை மொத்த மக்கள் தொகைக்கும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கடந்த 2013 ஆம் ஆண்டு பெறப்பட்டிருந்த கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகைக்கும் ஏறத்தாழ 10000 வித்தியாசம் இருந்தது. ஆனால் தகவல் அறியும் […]

கையொப்பம் இல்லாமல் அனுப்பப்பட்டு வரும் அழைப்பு கடிதம் – கீழக்கரை நகராட்சிக்கு மக்கள் நல பாதுகாப்புக் கழகம் கண்டனம்

கீழக்கரை நகராட்சியில் வார்டு மறுவரையரை குளறுபடிகள் சம்பந்தமாக ஆன்லைன் மூலமும், நேரடியாகவும், பதிவுத் தபால் வழியாகவும் ஆட்சேபனை மனு செய்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மனுதாரர் அனைவருக்கும் கீழக்கரை நகராட்சி ஆணையராக பணியாற்றிய திருமதி வசந்தியிடம் இருந்து மதுரையில் நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்திற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்பு கடிதத்தில் எந்த ஒரு நகராட்சி அதிகாரியின் கையொப்பமும் இல்லாமல் கை விடப்பட்டுள்ளது. இதனால் கையொப்பம் இல்லாத கடிதத்தை வாங்கி வாசித்த மனுதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து […]

விபத்தை தடை செய்ய வேகத்தடை அவசியம் – மக்கள் டீம் கோரிக்கை ..

கீழக்கரையின் நகரம் அதிகப்பட்சமாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு குறைவாக இருந்தாலும், பல வகையான அழகூட்டும் பேவர் ப்ளாக் சாலை, தார் சாலைகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அழகை அழிக்கும் வண்ணம் அழிக்க முடியாத அளவுக்கு குப்பை மேடுகளும் நிறைந்த வண்ணம்தான் உள்ளது என்பது கவனிக்கல வேண்டிய விசயம். இத்தனை அழகான சாலைகள் இருந்தாலும், அச்சாலைகளில் கனரக வாகனங்களை விட அதிகமாக ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களே அதிகம் செல்கின்றன. இவ்வாகனங்கள் அதிகம் அதிகம் […]

கீழக்கரை காவல் துறையுடன் பொது நல அமைப்புகள் இணைந்து நாளை நடத்தும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து தடுப்பு நிகழ்ச்சியில் ADSP வெள்ளத்துரை சிறப்புரை..

கீழக்கரை நகரில் கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நெரிசல் சொல்லொண்ணா துயரத்தை பொதுமக்களுக்கு தந்து வருகிறது. கீழக்கரையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வாகன பெருக்கத்தால் சாலைகள் முழுமையும் எந்நேரமும் வாகனங்கள் நிரம்பி இருக்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் செயல்படும் வாகன ஓட்டிகளால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணாக்கர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிறுவர்களால் இயக்கப்படும் இரு சக்கர வாகனங்களால் தொடர்ந்து உயிரிழப்புகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இது சம்பந்தமாக கீழக்கரை காவல் துறையுடன் பொது […]

நகராட்சியை நவீன படுத்த வந்த உபகரணங்கள், நலிந்து கிடக்கும் அவலம்..

கீழக்கரை நகராட்சியின் சுகாதாரம்தை மேன்படுத்த போவதாக அறிவித்து, அதற்கான நவீன கம்பெக்டர் வாகனம் மற்றும் நவீன ?? குப்பைக் கொட்டும் தொட்டிகளும் பல லட்சம் ரூபாய் செலவில் வந்திறங்கி, நகராட்சி ஆணையரால் அத்திட்டம் தொடங்கியும் வைக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் தொடங்கி சில தினங்களிலேயே மக்கள் பெரும் அவதிக்கும், அதிருப்திக்கும் ஆளாகியுள்ளார்கள், காரணம் முறையான பயிற்சி எடுக்காமல் கம்பெக்டர் வாகனம் மூலம் குப்பைகளை அள்ளுவதால், கழிவுகள் சாலைகளிலும் சிந்துகிறது. அதே போல் 4 சக்கரங்களுடன் வாங்கப்பட்ட குப்பை கொட்டும் […]

கீழக்கரையில் காவல்துறை அதிகாரி தலைமையில் போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம்..

கீழக்கரையில் இன்று (21-01-2018) காவல்துறை ஆய்வாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் காவல் நிலைய அலுவலகத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் பல் வேறு சமூக அமைப்புகள் ,வர்த்தக அணி மற்றும் அரசியல் கட்சிகள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  காவல்துறை ஆய்வாளர் பேசுகையில் நிர்ணயிக்கப்பட்ட பயணிகள் அளவுக்கு மேலாக ஆட்டோக்களில் பொதுமக்கள் பயணம் செய்தல்,  முக்கிய சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபரீதம் மற்றும் அதன் விளைவுகளை விளக்கினார். ஊருக்ககுள் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது […]

கீழக்கரை நகராட்சியில் ”பேவர் ப்ளாக்” வேலை தொடங்கியது … இப்பொழுது “நிலைக்குமா” அல்லது மீண்டும் “பிளக்குமா”…

கீழக்கரை நகராட்சியில் கடந்த ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் பல இடங்களில் மண் சாலைகள் மற்றும் தார் சாலைகள் இருந்த இடத்தில் பேவர் ப்ளாக் சாலைகள் அமைத்தார்கள். நகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்ட இந்த பணியில் முறைகேடு என்றும், தரம் இல்லை என்றும் பல் வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே போல் சமூக ஆர்வலர்கள் மூலமாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல்கள் பெற பட்ட பொழுது தொடர்ந்து சில குறிப்பிட்ட குத்தகைகார்ரகளுக்கே ஒப்பந்தம்  வழங்கப்பட்டதும் தெரிய வந்தது. இச்சூழலில் […]

கடந்த வருடம் கேட்ட கேள்விக்கு பதில் தர தகவல் உரிமை ஆணையத்திடம் நேரடியாக முறையீடு..

கடந்த நவம்பர்.17, 2016ம் ஆண்டு கீழக்கரை நகராட்சியிடம் ஒரே ஒரு கேள்வி என்று கீழக்கரையில் உள்ள பல பிரச்சினைகளுக்கான விளக்கம் கேட்டு கீழக்கரை சட்டப்போராளிகள் சார்பாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேள்வி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று வரை அதற்கான விளக்கமான பதில் கிடைக்கவில்லை. அந்த கேள்வியை ஒட்டி மேல்முறையீடும் செய்யப்பட்டது, ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க படாமலே இருந்தது. அதே சமயம் மனுக்கள் மூலமாக மட்டும் எதையும் சாதிக்க முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தாலும், […]

கீழக்கரையில் தாசில்தார் தலைமையில் ஆர்ப்பாட்டம் ..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வட்டாட்சியர் கணேசன் மற்றும் துணை தாசில்தார், சிவக்குமார் தலைமையில் 21அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை கோஷமிட்டு வலியுறுத்திய வண்ணம் அலுவலர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கீழக்கரை தாலுகா கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டம்…

கீழக்கரை தாலூகாவுக்கு உட்பட்ட VAO – Village Administrative Officer எனும் கிராம நிர்வாக அலுவலர்கள் தாலூகா அலுவலகத்தில் இன்றிலிருந்து போராட்டம் அறிவித்துள்ளனர். கீழக்கரை தாலுகா மொத்தம் 18 கிராம நிர்வாக அலுவலர்களை உள்ளடக்கியதாகும். இவர்கள் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் இன்று (08-01-2018) இரவு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர். பின்னர் 10ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், 18 ம் தேதியிலிருந்து தொடர்ந்து வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தவும் […]

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் – கீழக்கரையில் இருந்து நேரடி வீடியோ ரிப்போர்ட் …

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாக தமிழக அரசும் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதுபோல் தனியார் வாகனங்களும் தங்களால் இயன்ற அளவு பங்களிப்பு செய்து வருகிறார்கள். அது சம்பந்தமாக கீழக்கரை பேருந்து நிலையத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் …

கீழக்கரையை விட்டு விலகாத டெங்கும்.. கண்டு கொள்ளாத நகராட்சி நிர்வாகமும்..

கடந்த சில மாதங்கள் முன்பு வரை டெங்கு பரபரப்பு ஊர் முழுவதும் பரவி வந்தது.  மாவட்ட ஆட்சியரும் அவருடைய பங்குக்கு நகராட்சி நிர்வாகத்தை முடுக்கி விடுவதை விட சாமானிய மக்களின் இடங்களில் கொட்டி கிடக்கும் குப்பைகளுக்கு பல ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து சென்றார். அதைத் தொடர்ந்து டெங்கு நோயும் கட்டுக்குள் வந்தது போல் ஒரு மாயையும் உண்டானது. ஆனால் உண்மையில் டெங்கு கொசு கீழ்க்கரையை விட்டு விலகுவதாகவே இல்லை. ஆனால் சமீபத்தில் கீழக்கரை வடக்குத் தெரு […]

பயனில்லாமல் தெருக்களில் தொங்கும் தொலைபேசி வயர்களின் நிலை என்ன??

கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு சாதாராண தொலைபேசி மட்டுமே உபயோகத்தில் இருந்து வந்த நிலையில் இன்று 90 சதவீதத்திற்கும் மேலான வீடுகளில் தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டு அலைபேசிக்கு மாறிவிட்டார்கள் என்பதுதான் யதார்த்த நிலை. ஆனால் தொலைபேசி இல்லாத தெருக்களில் கூட அதற்காக பயன்படுத்தப்பட்ட வயர்கள் அதனுடைய சந்தை மதிப்பு அறியாமல் தொங்கிய நிலையில் உள்ளது. பல இடங்களில் கேபிள் டி.வி வயர்களும் பழைய தொலைபேசி வயர்களும் அடையாளம் தெரியாத அளவு பிண்ணி பினைந்து கிடக்கின்றன. […]

கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்..வீடியோவுடன்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கிராம நிர்வாக உதவியாளர்கள் இன்று (05-01-2018) 5(ஐந்து) அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் தாசில்தார் சிவக்குமார் தலைமையிலும் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கத்தலைவர் உத்தம சேகரன் முன்னிலையில் 5அம்ச கோரிக்கைகளை வலியுறித்தி கீழக்கரையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கச் செயலாளர். சரவணக்குமார், பாக்கியவதி, மாவட்ட இணை செயலாளர். பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கீழக்கரை நகராட்சியில் ஒரே நாளில் மாயமான 10000 பேர் – குளறுபடி செய்த அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய சட்டப் போராளிகள் கோரிக்கை..வீடியோ விளக்கம்..

கீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும், சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட ஆவணங்களின் படியும், கீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் பிரகாரமும், கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 47730 ஆகும். அதில் ஆண்கள் எண்ணிக்கை 25392 , பெண்கள் எண்ணிக்கை 22338. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள மறு வரையறை வார்டு பட்டியலில் கீழக்கரை நகராட்சியின் 2011 ஆம் ஆண்டைய மொத்த மக்கள் […]

ஆடல், பாடலுடன் கீழக்கரையில் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..

கீழக்கரையில் இன்று (05-01-2018) நகராட்சி சார்பாக முக்கிய வீதிகளான பஜார் பகுதி, சின்னக்கடை தெரு மற்றும் பல பகுதிகளில் ஆடல், பாடலுடன் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் திடக்கழிவு மேலாண்மை, தரம் பிரித்தல், கழிப்பறைகளை உபயோகித்தல் போன்ற விழிப்புணர்வு விளக்கங்களை “முழு சுகாதாரம் தமிழகம் – தூய்மை இந்தியா திட்டம் 2018” என்ற தலைப்பில் செயல்படுத்தி வருகின்றனர். இக்கலை நிகழ்ச்சிகளை கீழக்கரை நகராட்சியுடன் இணைந்து அன்னை கம்சலை கலைக் குழுவினர் நடத்தி வருகின்றனர்.

அரசுப் பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிக் கிடக்கும் கீழக்கரை பேருந்து நிலையம் ..

தமிழகத்தில் நேற்று முதல் (04-01-2018) அரசு பேருந்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் தமிழகமே ஸ்தம்பித்த நிலையில் உள்ளது. பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் முதல் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் வரை வீடு திரும்ப முடியாமல் தத்தளித்த வண்ணம் உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் கீழக்கரை பகுதியிலும் அரசு போக்குவரத்து எதுவும் இல்லை. சில தனியார் பேருந்துகள் மட்டுமே செயல்பட்ட வண்ணம் உள்ளன. இதனால் பேருந்து […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!