கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்! புதுச்சேரி அரசு அறிவிப்பு..

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுவை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தற்போது கிடைத்துள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த […]

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெயரில் மக்களவை, சட்டப்பேரவை தொடர்பான மசோதா, யூனியன் பிரதேசங்கள் தொடர்பான மசோதா அறிமுகம். மக்களவை, மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முதல் மசோதா வழி வகுக்கும். யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த இரண்டாவது மசோதா வழி வகுக்கும். மசோதாக்கள் நாடாளுமன்ற ஒப்புதலை பெற்றாலும் 10 ஆண்டுக்கு பிறகே நடைமுறைக்கு வர வாய்ப்பு. […]

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: வெளியானது அறிவிப்பு!

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: வெளியானது அறிவிப்பு! தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ”சுருக்கெழுத்து அதிவேக (ஹை ஸ்பீடு) தேர்வு பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதியும் சுருக்கெழுத்து இளநிலை, இடைநிலை முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 22 மற்றும் 23-ம் தேதியும், கணக்கியல் இளநிலை, முதுநிலை தேர்வுகள் பிப்ரவரி 24ம் தேதியும், தட்டச்சு இளநிலை, முதுநிலை […]

ராமநாதபுரத்தில் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை முன்னிட்டு கொடியேற்றம் விழா..

இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் ஆள் ஆத்தி மரங்கள் நடுவே இயற்கையில் எழில் கொஞ்சும் தென் தமிழகத்தின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில் வருகின்ற 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது அதற்காக மண்டல பூஜை முன்னிட்டு இன்று (17/12/2024) அதிகாலை கணபதி ஓமம் க்ஷ அஷ்டாபிஷேகம் மற்றும் ஸ்ரீ வல்லபை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்று ஆலயத்தில் உள்ள கொடிமரத்தில் கோயில் குருசாமி மோகன் கொடி ஏற்றினர்.  இதில் […]

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீர் 2 நாள் நிறுத்தம் : ஆட்சியர் தகவல்..

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), புனரமைப்புத் திட்டத்தின் கீழ் தொகுப்பு III & V பிரதான குழாய்களை இணைக்கும் பணி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 19.12.2024 & 20.12.2024 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

சம வேலைக்கு சம ஊதியம் : ரேஷன் கடை பணியாளர்கள் தீர்மானம்..

இராமநாதபுரம்: இராமநாதபுரத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் வட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாநிலச்செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஞானசேகரன் வர வேற்றார். மாவட்டத்தலைவர் தினகரன் தலைமையில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கீழக்கரை, ஆர் எஸ் மங்கலம், நயினார்கோவில், வட்டக்கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பொதுவிநியோக திட்டத்திற்கு தனித்துறை, சம வேலைக்கு சம ஊதியம், ஓய்வூதியம், உணவுப் […]

தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு : இலங்கை அதிபரிடம், பிரதமர் மோடி வலியுறுத்தக்கோரி ராமநாதபுரம் எம்பி கடிதம்

இராமநாதபுரம் : பிரதமர் நரேந்திர மோடிக்கு நவாஸ் கனி எம்பி கடிதம் எழுதிய கடிதத்தில்:- இலங்கை பிரதமர் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்திருக்கும் நிலையில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது. இலங்கை அதிபர் நம் நாட்டிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையான […]

பெருங்குளம்,  ஆர் எஸ் மடை, ரெகுநாதபுரம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி : நாளை (17/12/2024) மின் தடை

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (டிச. 17) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் செம்படையார்குளம், வட்டான்வலசை, எஸ் கே.ஊரணி, கீழ நாகாச்சி, உச்சிப்புளி, துத்திவலசை,  என்மனம் கொண்டான், இருமேனி, பிரப்பன்வலசை, நொச்சியூரணி, சூரங்காட்டுவலசை, மானாங்குடி, கடுக்காய்வலசை, புதுமடம், நாரையூரணி, வளங்காவேரி, ரெட்டையூரணி, தாமரைக்குளம், மான் குண்டு, உசிலங்காட்டு வலசை, பெருங்குளம், நதிப்பாலம், ஏந்தல், உடைச்சியார்வலசை, வழுதூர், வாலாந்தரவை, குயவன்குடி, கீரி பூர்வலசை, சமயன் வலசை, வாணியன்குளம், வடக்கு […]

உசிலம்பட்டி தற்காலிக பேருந்து நிலையத்தில் குண்டும் குழியுமான சாலையை சீரமைத்த திமுக நிர்வாகி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் உசிலம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது.,இந்த பேருந்து நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியதால் பேருந்துகள் வந்து செல்வதில் பெரும் சிரமத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.,இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில், இது குறித்து அறிந்த சமூக ஆர்வலரும், திமுக […]

உசிலம்பட்டி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பிட்டு முகாம்.

உசிலம்பட்டி வட்டார வள மையம் அலுவலகத்தில்  மதுரை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக  கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை இணைந்து நடத்தும் 0.18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.மதுரைமாவட்டம்,ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் உசிலம்பட்டி  வட்டார வள மையத்தில்   முதன்மைக் கல்வி அலுவலர்  வழிகாட்டுதலின் படி மாற்றுத் திறன் மாணவர்களுக்கு மருத்துவ  மதிப்பீட்டு முகாம் உதவி  திட்ட அலுவலர் சரவண முருகன் மற்றும்  மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமி […]

இன்று காலை 8.30 மணி அளவில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு..

தமிழகத்தில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வான வலுப்பெறுவதிலும், புயலாக மாறுவதிலும் போக்கு காட்டியது. கடைசியில் ஃபெஞ்சல் புயலாக உருவெடுத்து புதுச்சேரி, விழுப்புரம், மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்றே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று புதிய காற்றழுத்த […]

அதி விரைவு இரயில் சாதா இரயிலாக மாற்றம்! ஏன் எதற்கு எப்படி?

சென்னை சென்ட்ரல்-மைசூரு அதிவிரைவு ரெயில், மதியம் 1.35 மணிக்கு புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு பெங்களூருவை அடையும். இரவு 10 மணிக்கு மைசூருவை சென்றடையும். இந்த ரெயில் 23 நிலையங்களில் நின்று செல்கிறது. 497 கி.மீ. தூரத்தை 9 மணி 15 நிமிடங்களில் கடக்கும் இந்த ரெயில் சராசரியாக மணிக்கு 54 கி.மீ. வேகத்தை கொண்டிருக்கிறது.இந்த ரெயில் முதலில், சென்னை-பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. இதன்பிறகு, 2019-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து மைசூரு வரை நீட்டிக்கப்பட்டது.இந்த நிலையில், இந்த […]

இதுக்கு மேல உங்களுக்கு அனுமதி இல்லை; கோவில் கருவறைக்குள் நுழைய இளையராஜாவிற்கு அனுமதி மறுப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியில் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா, அங்குள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். அங்கு ஆடித் திருப்பூரப் பந்தலில் நடைபெற்ற விழாவில், இளையராஜா இசையமைத்து பாடிய திவ்ய பாசுரம் இசைக் கச்சேரியும், நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்திருந்த இளையராஜா, ஆண்டாள் கோயிலில் தரிசனத்துக்காக சென்றார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்ன ஜீயர், ஆண்டாள் கோயிலில் உள்ள மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப […]

ராமநாதபுரத்தில்  25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி : வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு..

ராமநாதபுரம், டிச.16 – ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகம் செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி சார்பில் 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. செய்யதம்மாள் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யதம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சானாஸ் பரூக், ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக தலைவர் சுந்தரம் செய்யதம்மாள் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை […]

25 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் நீதிக்கான கூட்டணி அபார வெற்றி!!

25 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத் தேர்தலில் நீதிக்கான கூட்டணி அபார வெற்றி!! நீதிக்கான கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! தலைவர் பொறுப்புக்கு போட்டியிட்ட சுரேஷ் வேதநாயகம் 659 வாக்குகள் பெற்று 261 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி! (ஆர்.கே. பெற்ற வாக்குகள் 398) பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட அசீப் 734 வாக்குகள் பெற்று வெற்றி. இணைச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட நெல்சன் 697 வாக்குகள் […]

விசிகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆதவ் அர்ஜூனா..

திமுக கூட்டணிக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா தொடர்ச்சியாக பேசி வந்ததால், அக்கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து ஆதவ் அர்ஜுனா தொலைக்காட்சி நேர்காணலிலும், “எல்லோருக்குமான தலைவர் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு விசிக தலைவர் திருமாவளவன் வராததற்கு காரணம் திமுக கொடுத்த அழுத்தம்தான்” என தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில்தான், இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து கருத்து கூறுவதே தவறு என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி […]

சாலை வசதி இல்லை; வேதனை தெரிவித்த பொதுமக்கள்..

வடகரை சாம்பவர் தெரு பகுதியில் முறையான சாலை வசதி இல்லை எனவும், மழைக்காலங்களில் பல்வேறு இன்னல்களை இப்பகுதி மக்கள் சந்தித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வடகரை கீழ்பிடாகை பேரூராட்சிக்கு உட்பட்ட சாம்பவர் தெரு பகுதியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதியின்றி மழைக் காலங்களில் மக்கள் சேற்றில் வசிக்கும் அவலநிலை உள்ளது. இப்பகுதியில் சாலை அமைக்க பல முறை மனு அளித்தும் இதுவரை சாலை […]

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு..

இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி செயற்குழுவை கூட்டியது.இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் இன்று காலை 10.35 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமை […]

இன்று உருவாகுது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு..

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடதமிழகம், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை காணப்பட்டது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, மேலும் வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 2 நாட்களில் […]

செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு வாழ்த்து! சர்ச்சையை ஏற்படுத்திய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு..

செஸ் சாம்பியன் குகேஷ்-க்கு வாழ்த்து! சர்ச்சையை ஏற்படுத்திய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.. உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் லிரெனை வீழ்த்தி தமிழகத்தின் குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார்.18 வயதான குகேஷ், செஸ் உலகின் 18-வது சாம்பியனாக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். மேலும் குறைந்த வயதில் சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்த வீரர் என்ற மகத்தான சாதனைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார். இந்திய தரப்பில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை ருசித்த 2-வது வீரர் ஆவார். […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!